Posts

கண்கள் துடிப்பின் பலன்கள்!

Image
கண்கள் துடிப்பின் பலன்கள்!  எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.  ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. கண் துடிப்பது எதனால் ஏற்படுகிறது?  உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இதற்கு மருத்துவத்தில் 'வுஐஊ" எனக் கூறுவார்கள். கண்கள் துடிப்பதன் பலன்கள் :  வலது புருவம் - பணவரவு.  இடது புருவம் - குழந்தை பிறப்பு, கவலை.  புருவ மத்தி - பிரியமானவருடன் இருத்தல்.  கண் நடுபாகம் - மனைவியை பிரிந்திருத்தல்.  வலது கண் - நினைத்தது நடக்கும்.  இடது கண் - மனைவியை பிரிந்திருத்தல், கவலை.  வலதுகண் இமை - சந்தோஷமான செய்தி வரும்.  இடது...

ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறைகள் - Aadhar Card Apply! in Tamil

  ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறைகள் - Aadhar Card Apply! ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே ஆதார் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள்: ⚡ அடையாள அட்டை ⚡ இருப்பிடச் சான்று ✅ அடையாள அட்டைக்கு சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு ஐடி கார்டு இவற்றுள் ஒன்றை நீங்கள் வழங்கலாம். ✅ இருப்பிடச் சான்றாக கடைசி மூன்று மாதங்களுக்குள் செலுத்திய தண்ணீர் கட்டண ரசிது, மின்சார கட்டண ரசிது அல்லது தொலைபேசி கட்டண ரசீது) இவைகளில் ஏதேனும் ஒன்றை சான்றாக வழங்கலாம். ✅ ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. / எம்.எல்.ஏ. / கெசட்டட் ஆபீசர் / தாசில்தார் / பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ்கள் சான்றாக எடுத்து கொள்ளலாம். ஆதார் பதிவு: பிறகு, பதிவு படிவத்தை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும். படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையமுகவரிக்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தை பதிவ...

மர்ம பூமியில் மறைந்துள்ள அதிசயம் !!

Image
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP மர்ம பூமியில் மறைந்துள்ள அதிசயம் !!   அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்றும் பல அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத மர்மங்களை பற்றி இன்று பார்ப்போம். 👉 கற்கள் தானாய் நகர்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடக்கிறது. 👉 மரணப் பள்ளத்தாக்கு (Death Valley) பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ரேஸ்டிராக் பிளாயா (Racetrack Playa) எனப்படுகிறது. இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ, உயிரினங்களோ, மரம் மட்டைகளோ எதுவும் கிடையாது. 👉 இந்த மர்ம பூமியில் தான் கற்கள் தானாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது இன்றும் புதிரான விஷயமாகவே இருக்கிற...

வாரம் ஒருமுறை ஏற்படும் விபத்து... புரியாத புதிர்... லாவோஸ் ஜாடிகள்!

Image
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP வாரம் ஒருமுறை ஏற்படும் விபத்து... புரியாத புதிர்... லாவோஸ் ஜாடிகள்!   லாவோஸ் நாட்டில் ஜிங் குவாங் என்ற சமவெளி உள்ளது. இது ஜார்ஸ் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் விசித்திரமான, தொன்மையான ஜாடிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இந்த ஜாடிகளில் பெரும்பாலானவை மணற்கற்கள், சுண்ணாம்புகற்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஜாடிகள் இரும்பு உளிகளை கொண்டு கற்களை குடைந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இவ்வளவு ஜாடிகளையும் எந்த நாகரீகத்தை சார்ந்த மனிதர்கள் கட்டியிருக்கிறார்கள், எந்த நோக்கத்திற்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தொல்லியலாளர்களுக்கு இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த ஜாடிகள் ஒவ்வொன்றும் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமும், 13 டன்கள் வரை எடையும் கொண்டவை. இந்த ஜாடிகளின் உண்மையான பயன்பாடு என்னவென்று தெரியவில்லை. இறந்தவர்களை புதைப்பதற்கு இவை பயன்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்...

கண்ணைக் கவரும் கண்ணாடிப்பாலம் !!

Image
 நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP கண்ணைக் கவரும் கண்ணாடிப்பாலம் !!  🌉 பாலத்தில் செல்வதில் நம்மில் பலருக்கு ஆர்வம் இருந்தாலும் கூட மிகவும் பயமான விஷயமாக கருதுவோம். பாலத்தில் நின்று கீழே பார்த்தால் தலையே சுற்றிவிடும். அந்த அளவிற்கு உயரமாகவும், பயமாகவும் இருக்கும். அந்த வகையில் புதுமைக்கு பெயர் பெற்ற சீனாவில் உள்ள திகிலூட்டும் அனுபவத்தை தரும் கண்ணாடி பாலத்தை பற்றி காண்போம். 🌉 மலைக்குன்றுகளுக்கு இடையே கண்ணாடி பாலங்களை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் திகிலூட்டும் அனுபவத்தை அளித்து கொண்டிருக்கிறது சீனா. சிறப்புகள் : 🌉 உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடைபாதை பாலம் சீனாவின் ஹுனான்(Hunan) மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ (Zhangjiajie) மலைப் பகுதியில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று திறக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் ஹாய்ம் டோடன் (Haim Dotan) எனும் பொறியாளர். 🌉 தரைமட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்திலும், இரு மலைக்கு இடையே 430 மீட்டர் நீளத்திலும் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், அதில் நடந்து செல்லும் பார்வையாளர்களுக்கு திகிலா...

மாமல்லபுரத்தில் மறைந்துள்ள அதிசயம்!

Image
  நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP மாமல்லபுரத்தில் மறைந்துள்ள அதிசயம்!   கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோவில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள். இவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளன. 😯 விடை தெரியாத மர்மங்களுள் இன்று நாம் பார்க்க இருப்பது... மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து தான்... 😯 தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை அருகே கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து பாறை அமைந்துள்ளது. இது வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது.  😯 இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பானையிலிருந்த வெண்ணெயை திருடி சாப்பிட்ட செயலை நினைவுக்கூறும் வகையில் இக்கல்லை கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என அழைக்கப்படுகிறது. சிறப்பு : 😯 உலகமே வியந்து பார்க்கக்கூடிய மர்மங்கள் நிறைந்த கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து பாறை, சுமார் 1200...